For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நேரு பிறந்த தினம்... சென்னையில் தலைவர்கள் அஞ்சலி!

By Chakra
Google Oneindia Tamil News

Governor Barnala Tribute Jawaharlal Nehru
சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 122- வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிண்டி கத்திப்பாராவில் உள்ள நேரு சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பண்டித நேருவின் பிறந்த தினம் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் ஆளுநர் பர்னாலா, அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பரிதி இளம்வழுதி, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செய்தனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரிஅனந்தன், வசந்தகுமார் எம்.எல்.ஏ., உள்பட காங்கிரஸ் பிரமுகர்களும் மரியாதை செலுத்தினர்.

இதே போல் சத்தியமூர்த்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் நேரு படத்துக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, குமரி அனந்தன், யசோதா எம்.எல்.ஏ., தாமோதரன், சிவலிங்கம், பூவராகன், சி.டி. மெய்யப்பன், டி.வி.துரைராஜ், நாகராஜ், ஜீனத் சர்புதீன் உள்பட பலர் பங்கேற்று மலர் தூவினர்.

காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் குழந்தைகள் தினத்தையொட்டி விருகம் பாக்கம் கருணை இல்லத்தில் மாநில துணை தலைவர் ஹசீனா சையத் அன்னதானம் வழங்கினார்.

அங்கு தங்கி படிக்கும் 50 மாணவர்களுக்கு கம்ப்யூட் டர் பயிற்சிக்கான உதவித் தொகையும் வழங்கினார். ராயபுரத்தை சேர்ந்த ஒரு சிறு வனுக்கு ரத்த புற்று நோய்க்கு மருத்துவ செலவுக்கு நிதி உதவியும் வழங்கினார்.

மேற்கு மாம்பலம் 123- வது வார்டு மாநகராட்சி அலு வலகத்தில் நேரு படத் துக்கு கவுன்சிலர் ஜெயகலா பிரபாகர் மாலை அணிவித்து மலர் தூவினார். மாணவ -மாணவிகளுக்கு இனிப்புகளும் வழங்கினார்.

தமிழகம் முழுக்க பல்வேறு இடங்களில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால், பல பள்ளிகளில் ஒரு நாள் முன்பாகவே குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X