For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சித்திரை பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

Sabarimalai temple
சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை மாத பூஜைகளுக்காக இன்று நடை திறக்கப்படுகிறது.

இன்று மாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இன்றைய தினம் சிறப்பு பூஜைகள் எதுவும் இருக்காது.

நாளை கணபதி ஹோமத்துடன், வழக்கம் போல் பூஜைகள் துவங்கும். வரும் 15ம் தேதி அதிகாலை சித்திரை விஷூ தரிசனம் நடைபெறும்.

அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஷூகனி காட்சிக்காக, கருவறையில் ஐயப்ப சுவாமி முன்பாக, வெண்கல உருளியில் பலவகை கனிகளுடன், தங்க நகைகள், பணம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்படும்.

தந்திரி கண்டரரு மகேஸ்வரரு முன்னிலையில், மேல் சாந்தி விஷ்ணு நம்பூதிரி திருவிளக்கேற்றி, அவற்றை சுவாமிக்கு காட்சிக்கு வைப்பார்.

அதன் பின், பக்தர்கள், சுவாமி தரிசனத்துடன் விஷூ கனி தரிசனத்தை காண, அனுமதிக்கப்படுவார்கள்.

சித்திரை மாத பூஜைகள் வரும் 18ம் தேதி வரை நடக்கும். அன்றைய தினம் பூஜைகள் முடிவடைந்து இரவு 10 மணிக்கு இரவுகால பூஜைக்கு பின், நடை அடைக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X