கேபிள் டிவிகளை கண்காணிக்க நிருபர் குழு - தமிழக அரசு முடிவு
மதுரை: கேபிள் டிவி கண்காணிப்பு குழுவில் நிருபர்களை நியமித்து அதற்கான அரசு ஆணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க கேபிள் டிவி ஒளிப்பரப்பில் பல்வேறு சர்ச்சைகளும், புகார்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
மேலும், சேடிலைட் சேனலுக்கு நிகராக உள்ளூர் சேனல்களும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இதில் அளவுக்கு அதிகமான உள்ளுர் சேனல்களை கேபிள் நிறுவனம் வழங்கி வருவதால் மேலும் மேலும் பிரச்சனைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த நிலையில், கேபிள் டிவி கண்காணிப்பு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இதன் முதல் கட்டமாக குழு பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக பிரிக்கப்பட்டு செயல்பட உள்ளது.
இக்குழுவின் உறுப்பினர்களாக நாளிதழ்களின் நிருபர்கள் செயல்படுவார்கள்.
இதற்காக மாவட்டத்தில் ஆறு பேர் கொண்ட குழுவை தேர்வு செய்து அனுப்பி வைக்குமாறு மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.