தூத்துக்குடியில் 105 பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள்
தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் 105 பள்ளிகளுக்கு புதிய கட்ட்டங்கள் கட்டப்படவுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்திந்திய அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இரண்டாம் கட்டமாக 82 கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இதில் பல்வேறு வளர்ச்சி மற்றும் நலத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பஞ்சாயத்து யூனியன் பகுதிகளில் உள்ள பள்ளிகள் மேம்படுத்தப்படுகின்றன.
இதற்காக பள்ளி கட்டிடங்களை தனியார் பள்ளிகளின் தரத்திற்கு உயர்த்தும் அளவிற்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. 2009-2010ம் ஆண்டு 77 பள்ளிகளில் 39 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்த ஆண்டு 103 பஞ்சாயத்து யூனியன் துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 162 கட்டிடங்கள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு கோடியோ 5 லட்சத்து 44 ஆயிரத்து 300 ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான நிதி வரப்பெற்றதும் விரைவில் கட்டுமான பணிகள் துவங்கும் என தெரிகிறது.