கோவை கலெக்டர் அலுவலகத்தில் செம்மொழி மாநாடு தகவல் மையம் திறப்பு
கோவை: கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செம்மொழி மாநாட்டின் தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு அறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வரங்க பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் மாநாடு தொடர்பாக தங்களுக்குத் தேவையான விவரங்களை உடனே பெறும் வகையில் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு வெளிநாட்டு அறிஞர்கள், கட்டுரையாளர்கள், ஆய்வரங்க பிரதிநிதிகள் தங்கும் இடங்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அறைகள், உதவியாளர்கள், வாகன வசதி உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கொண்ட தகவல் தொகுப்பு கணினியில் தொகுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், உலகத் தமிழ் செம்மொமாழி மாநாட்டில் பங்கேற்கும் நபரின் பெயரைக் குறிப்பிட்டாலே அவர்கள் குறித்த அனைத்து தகவல்களும் கணினியில் திரையில் தெரியும் வகையில் இந்த தகவல் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
மாநாட்டில் பங்கேற்க உள்ளவர்கள் மற்றும் மாநாடு குறித்த அனைத்து தகவல்களையும் 0422- 2211000 (20 இணைப்புகள்) என்ற தொலைபேசி மூலம் தெரிந்து கொள்ளாம்.