ஈஷா யோகா மையம் சார்பில் இலவச மரக்கன்றுகள் வினியோகம்
கோவை: சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஈஷா யோகா மையத்தின் சார்பில் கோவையில் இன்று மரக்கன்றுகள் இலவசமாக வினியோகிக்கப்படுகின்றன.
பசுமைக்கரங்கள்
உலகெங்கிலும் சர்வதேச சுற்றுச்சூழல் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. மரங்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த ஈஷா அறக்கட்டளை சார்பில் பசுமைக் கரங்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சர்வதேச சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று, மக்களிடையே மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஈஷா சார்பில் மரக்கன்றுகள் மக்களுக்கு இலவசமாக வினியோகிக்கப்படுகின்றன.
இடங்கள்
காலை 9.00 முதல் பகல் 1.00 மணி வரை, காந்திபுரம் டாக்டர் நஞ்சப்பா ரோடு, மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரிலும், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் அருகிலும் அமைக்கப்பட்டுள்ள ஈஷா பசுமைக் கரங்கள் அரங்கில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இத்துடன், மரம் வளர்ப்பது குறித்த விளக்க கையேடு ஒன்றும் இலவசமாக வழங்கப்படுகிறது; ஒருவருக்கு ஒரு மரக்கன்று மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்கள்.