பிரான்ஸில் கம்பன் கழகத்தின் 10வது ஆண்டு விழா
பாரிஸ்: பிரான்சில் கம்பன் கழகத்தின் 10வது ஆண்டு விழா வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பிரான்ஸ் கம்பன் கழகத்தின் 10வது ஆண்டு விழா கம்பன் விழாவாக வரும் 12, 13 ஆகிய தேதிகளில் La Salle Champ de Foire-ல் நடக்கிறது.
முதல் நாளான நவம்பர் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் விழா இரவு 8.30 மணி வரை நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் விழா இரவு 8.30 மணி வரை நடக்கிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழருவி மணியன், நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றவிருக்கின்றனர்.
சிறப்புரை, ஆய்வுரை, தேனுரை, எழிலுரை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சொற்போர், கவியுரை, கவிமலர், தமிழிசை, நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.