செங்கோட்டை அருகே ஆரியங்காவில் அணையா விளக்கு ஏற்றப்பட்டது
ஐயப்ப சுவாமி விற்றிருக்கும் ஐம்படை வீடுகளான அச்சன்கோவில், ஆரியங்காவு, குழத்துபுழா, எரிமேலி, சபரி்மலை ஆகிய 5 ஸ்தலங்களில் கார்த்திகை மாதம் பிறந்ததை ஓட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது.
செங்கோட்டையை அடுத்துள்ள ஆரியங்காவில் ஐயப்ப சுவாமி ஐய்யனாக அருள் பாலிக்கிறார். இங்கு மண்டல பூஜை தொடங்கியதை அடுத்து அணையா விளக்கு ஏற்றப்பட்டது. இந்த விளக்கு சபரிமலையில் மகர விளக்கு பூஜை வரை அணையாமல் தொடர்ந்து எரியும் என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பெரும்பாலும் ஆரியங்காவு கோவிலுக்கு சென்று வழிபடுவதால் இங்கும் சபரிமலை ஐயப்ப கோவிலை போல் பூஜையும், அலங்காரமும் நடக்கும். மண்டல பூஜை தொடங்கியதை அடுத்து பெண்கள் விளக்கு பூஜை செய்து வழிபட்டனர். மண்டல பூஜை துவங்கியதை அடுத்து ஆரியங்காவு கிராமமே விழா கோலம் பூண்டுள்ளது.
சுவாமி ஐயப்பன் விற்றிருக்கும் ஐம்படை வீடுகளில் ஒன்றான ஆரியங்கா கோவிலில் மண்டல பூஜை தொடங்கியதை அடுத்து ஏராளமான பெண்கள் விளக்கு பூஜை செய்தனர்.