For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீசாந்த், ரோஹித் சர்மாவை உலகக் கோப்பை அணியில் சேர்த்திருக்கலாம்: வாசிம் அக்ரம்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகக் கோப்பைக்கான இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரீசாந்த் மற்றும் ரோஹித் சர்மா இல்லாதது தனக்கு ஆச்சரியம் அளிப்பதாக முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அக்ரம் கூறுகையில்,

அன்மை காலமாக ஸ்ரீசாந்த் அருமையாக பந்து வீசி வருகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் நிறைய விக்கெட் எடு்த்துள்ளார். அவர் தற்போது அதிவேகமாக முன்னேறி வருகிறார். நானாக இருந்திருந்தால் அவரை கண்டிப்பாக உலகக் கோப்பை அணியில் சேர்த்திருந்திருப்பேன்.

ரோஹித் சர்மாவை பொறுத்தவரை அவர் கற்றுக் கொள்ள வேண்டியவை இன்னும் கொஞ்சம் உள்ளது. அவர் திறமையான வீரர். தொடர்ந்து ரன்கள் எடுக்கவில்லை என்றால் இப்படித் தான் ஆகும். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்றார்.

அன்மையில் முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஸ்ரீசாந்த அபாரமாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Pakistan legendary cricketer Wasim Akram told that he is surprised to know that Sreesanth and Rohit Sharma are excluded from the world cup squad. Sreesanth has been showing great talent recently. Rohit is a talented player. I would have included them for sure in the world cup squad, he added.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X