புதுவையில் புராஜெக்ட் மதுரை நிறுவனர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் சிறப்புரை
புதுவை: மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டம் (புராஜெக்ட் மதுரை) நிறுவனர் முனைவர் கு. கல்யாணசுந்தரம் வரும் 28-ம் தேதி புதுவை தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரை ஆற்றுகிறார்.
தமிழ் இலக்கியங்களையும், இலக்கண நூல்களையும் மின் வடிவப்படுத்தி, உலகெங்கும் பரவியுள்ள தமிழர்கள் இலவசமாகப் பயன்படுத்தும் நோக்கில் மதுரைத்திட்டம் என்னும் பெயரில் இணையத்தில் பயன்பாட்டுக்கு வைத்துள்ள சுவிசர்லாந்தில் வாழும் முனைவர் கு. கல்யாணசுந்தரம் அவர்கள் தம் மதுரைத் திட்டப் பணிகள் குறித்துப் புதுவைத் தமிழ்ச்சங்கத்தில் சிறப்புரையாற்றவிருக்கிறார். இந்த நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி மாலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு புதுவை தமிழ்ச்சங்கத் தலைவர் முனைவர் வி. முத்து தலைமை வகிக்கிறார். முனைவர் மு. இளங்கோவன் வரவேற்புரையாற்றுகிறார். மதுரைத் திட்டம் மின்பதிப்புப் பணிகள் என்ற தலைப்பில் முனைவர் கு. கல்யாணசுந்தரம் சிற்பபுரையாற்றுகிறார். முனைவர் ஆ. மணி நன்றியுரை வழங்குகிறார்.