பகை விலக, கண் ஒளி காக்க சூரிய நமஸ்காரம்
ஒளி தரும் பொருட்களில் நான் கதிர் நிறைந்த ஞாயிறு என்கிறார் பகவத் கீதையில் பகவன் விஷ்ணு. கதிர் நிறைந்த ஞாயிறு என்பது ஆயிரம் ஒளிக்கதிர்களை உடைய சூரியனைக் குறிக்கும்.
சூரிய நமஸ்காரம்
முறைப்படி செய்யும் சூரிய நமஸ்காரத்தால் சரும நோய்களில் இருந்து குணம் பெறலாம்.
ஆதித்ய ஹிருதயம்
அகத்தியர், ஸ்ரீ ராமபிரானுக்கு, ஆதித்ய ஹிருதயம் என்ற நூலை உபதேசித்தார். இந்த நூலை பாராயணம் செய்து பலம் பெற்றமையால் மிகச்சுலபமாக ராவணனை ராமன் வெற்றி பெற முடிந்தது. பகை, அச்சம் விலக பகலவன் அருள் செய்வான்.
தினமும் சூரியனை வணங்கவேண்டும்.
எந்த மந்திரமும் தெரியாவிட்டாலும் காலை எழுந்தவுடன் உடலை தூய்மை செய்து கொண்டு சூரியன் இருக்கக்கூடிய திசையைப்பார்த்து ' ஓம் நமோ ஆதித்யாய புத்திரி பலம் தேஹிமே சதா " என்று சொல்லி மூன்று முறை வணங்கினால் போதும். ஆதவன் அளவில்லாத பலன்களை அள்ளி வழங்குவான் என்பது உறுதி.