For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கண்ணகி சிலை அருகே மீனவர் மகளிர் சிலம்பு ஏந்தி போராட்டம்

By Chakra
Google Oneindia Tamil News

Kannagi Statue
சென்னை: இலங்கை அரசை கண்டித்து சென்னை கண்ணகி சிலை அருகே மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினரும், நாம் தமிழர் இயக்கத்தின் மகளிர் அணியினரும் சிலம்பு ஏந்தி போராட்டம் நடத்தினர்.

மீனவர் மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் சமுத்திரா தேவி தலைமையில் நடந்த இந்தப் போராட்டம் நடந்தது.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள், ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்துபோகக் காரணமாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு துணை போன மத்திய அரசை கண்டிக்கிறோம் என்றும், 136 தமிழக மீனவர்களை கடத்திய இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர்.

இந்த கண்ணகி சிலை தான் அதிமுக ஆட்சி காலத்தில் அகற்றப்பட்டு பின்னர் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பின் மீண்டும் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Fishermen community women and Naam Tamillar party protest against Rajapakshe near Kannagi Statue marina.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X