For Daily Alerts
Just In
1006 கோவில்களுக்கு கும்பாபிஷேகம்: ஓ.பன்னீர் செல்வம் அறிவிப்பு
சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள 1006 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டசபையில் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது உறுப்பினர்கள் பலர் தங்கள் பகுதிகளில் உள்ள கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்படுமா என்று கேட்டனர்.
அதற்கு நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கூறிய பதில்,
தமிழகத்தில் தேவையான அனைத்து கோவில்களையும் முறையே பராமரித்து கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி இந்த ஆண்டு 1006 கோவில்களில் திருப்பணி மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Comments
English summary
TN finance minister O. Panneerselvam has told in the assembly that kumbabishekam will be performed in 1006 temples in the state as per CM Jayalalithaa's order.
Story first published: Thursday, September 8, 2011, 15:34 [IST]