வீட்டில் விளக்கேற்றினால் ஒளி கிடைக்கும்
விளக்கு ஏற்ற பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் ஒவ்வொரு எண்ணெய்க்கும்
ஒவ்வொருவிதமான பலன் உண்டு. மலிவாக கிடைக்கிறது என்று சிலர் பாமாயில் எண்ணெயில்
விளக்கேற்றுவார்கள். இது தவறு. எந்த எண்ணையில் ஏற்றினால் என்ன விதமான பலன்
கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.
பஞ்ச தீப எண்ணெய்
பசுநெய் கொண்டு விளக்கேற்றினால் கிரகதோஷம் நிவர்த்தியடையும்.
விளக்கெண்ணெய் கொண்டு தீபம் ஏற்றினால் குல தெய்வ அருள் கிடைக்கும்.
நல்லெண்ணெய் தாம்பத்ய விருத்தி கிடைக்கும்.
தேங்காய் எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் மன உறுதி கிடைக்கும்.
வேப்ப எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் இல்லற இன்பம் அதிகரிக்கும்.
இந்த 5 எண்ணெய்களை கலந்து விளக்கேற்றினால் மந்திர சித்தி தரும்.
வேப்ப எண்ணெயும், இலுப்பை எண்ணெயும் கலந்து தீபம் ஏற்றினால் ஐஸ்வர்ய யோகம்
தரும்.
இலுப்பை எண்ணெய் கொண்டு ஏற்றினால் சகல காரியசித்தி ஏற்படும்.
தீபம் ஏற்றக்கூடாத எண்ணெய்கள்
கடலை எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால் மனக்கவலையும், கடனும் அதிகரிக்கும். கடுகு
எண்ணெய் கொண்டு விளக்கேற்றினால், தொல்லைகள் அதிகரிக்கும். பாமாயில் கொண்டு
விளக்கேற்றினால் பாவம் பெருகும்.