10ல் துபாயில் இந்திய சுதந்திர தினத்தையொட்டி சிறப்பு ரத்ததான முகாம்
ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜென்ரல் சஞ்சய் வர்மா துவக்கி வைக்கிறார். அபுதாபி இந்திய சமூக மற்றும் கலாச்சார மைய தலைமைப் புரவலர் சித்தார்த் பாலச்சந்திரன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். லத்திஃபா மருத்துவமனை ரத்த வங்கியின் நாதியா அப்துல்லா கலந்தர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுச் சிறப்பிக்க இருக்கிறார்.
ரத்ததான முகாமில் பங்கேற்க விரும்புவோர் ஆகஸ்ட் 6ம் தேதிக்குள் முன்பதிவு செய்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ரத்ததானம் செய்ய விரும்புவோர் 050 15 12 757 / 050 51 51 926 / 0 5 5 2 2 0 7 2 6 3 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
அல்லது [email protected], [email protected] ஆகிய மின்னஞ்சல் முகவரிகளுக்கு இமெயில் அனுப்பலாம்.
இந்நிகழ்ச்சிக்கு சூப்பர் 94.7 வானொலி, ஃபியூச்சர் விஷன், டிஜிட்டல் ஐ ஸ்டுடியோ, கோட்டூர் இன்டீரியர்ஸ், யுவர்ஸ் ரெஸ்டாரன்ட் மற்றும் அல் அஃப்கர் அல் ரஃயாஹ் டெக்னிக்கல் சர்வீஸ் ஆகிய நிறுவனங்கள் அணுசரனை வழங்கியுள்ளன.