For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் வரும் 27ம் தேதி சமூக நல்லிணக்க நிகழ்ச்சி

Google Oneindia Tamil News

துபாய்: அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் வகையில் வரும் 27ம் தேதி மாலை 6.30 மணிக்கு துபாயில் சமூக நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

அனைத்து சமுதாய மக்களிடையே ஒற்றுமையை நிலைநாட்டி, அமைதியை பரப்பும் நோக்கில் வரும் 27ம் தேதி மாலை 6.30க்கு சமூக நல்லிணக்க நிகழ்ச்சி துபாயில் நடைபெற உள்ளது. இதில் முஸ்லிம் அல்லாத மக்கள் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களை குறித்தும் உள்ள சந்தேகங்களை நேரடியாக கேட்டு தெரிந்து கொள்ளும் வகையில் கேள்வி-பதில் நிகழ்ச்சியாக நடைபெறும்.

சவுதி அரேபியாவில் இருந்து வரும் அப்சலுல் உலமா பொறியாளர் ஜக்கரியா, மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு இறைவேதம், இறைத்தூதர் வாழ்வில் உள்ள சான்றுகளை அடிப்படையாக கொண்டு பதிலளிக்க உள்ளார்.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் 055-5188249, 050-9431980, 050-5959697 ஆகிய செல்போன் எண்களில் தொடர்புக் கொண்டு கூடுதல் விபரங்களை பெற்று கொள்ளலாம். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துபாய் மண்டல தமுமுக சார்பாக, மண்டல தலைவர் அதிரை சாகுல் ஹமீது தலைமையிலான குழுவினர்கள் செய்து வருகின்றனர்.

English summary
TMMK is conducting a community reconciliation programme in Dubai on Oct.27.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X