For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜனவரி 11ல் துபாயில் பொங்கல் கொண்டாட்டம்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: தமிழ்த்துளி அமைப்பின் பொங்கல் விழா வரும் ஜனவரி மாதம் 11ம் தேதி துபாய் க்ரீக் பூங்காவில் நடைபெறவுள்ளது. குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை பொங்கல் விழா நடைபெறுகிறது. காலை சிற்றுண்டி, மதிய உணவு மற்றும் மாலையில் தேனீர் வழங்கப்படும். பெரியவர்களுக்கு ஒருவருக்கு 20 திர்ஹமும், ஒரு குழந்தைக்கு 10 திர்ஹமும் கட்டணமாக வசூலிக்கப்படும். இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 4ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

காலை 9.30 மணி முதல் 10.00 மணிக்குள் வரும் உறுப்பினர்களுக்கு தமிழ்த்துளியின் சார்பில் க்ரீக் பூங்கா நுழைவுச்சீட்டு வழங்கப்படும்.

ஷார்ஜாவில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து வசதி தேவைப்படும் என்றால் அவர்கள் அதை வரும் 4ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும். பொங்கல் திருநாளை அனைவரும் ஒன்றாக சேர்ந்து கொண்டாட வருமாறு தமிழ்த்துளி அழைப்பு விடுத்துள்ளது.

English summary
Dubai Tamil Thuli organisation has arranged for Pongal celebrations on january 11 at Creek Park. Those who want to attend this programme are asked to register their names before january 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X