நாளை துபாயில் உலக நகைச்சுவையாளர் சங்க முதலாம் ஆண்டு விழா
இதனையொட்டி நகைச்சுவை பேச்சரங்கம் மற்றும் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது. நகைச்சுவைப் பேச்சரங்கில் சென்னை பஷீர் அஹமது சயீத் பெண்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் சரோன் செந்தில் குமார், டி.செந்தில்குமார் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற இருக்கின்றனர்.
அசத்தப் போவது யாரு புகழ் தேவகோட்டை அசத்தல் ராமநாதன் வழங்கும் 'குடும்பத்தில் கணவன் அப்பாடக்கரா அல்லது வெறும் டம்மி பீஸா?' எனும் சிறப்பு நகைச்சுவைப் பட்டிமன்றம் ஆகியவை நடைபெற இருக்கின்றன.
விழாவில் அனைவரும் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள். இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் அன்சாரி 050 744 3750, யூசுப் 050 7750 395, அனீஸ் 055 976 17 13 மற்றும் கமலக் கண்ணன் 050 2426 768 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.