For Daily Alerts
Just In
துபாயில் 'ஹைக்கூ ஆற்றுப்படை' நூல் அறிமுக நிகழ்ச்சி
மதுரையைச் சேர்ந்த கவிஞர் இரா. ரவியின் ‘ஹைக்கூ ஆற்றுப்படை' எனும் கவிதை நூல் அறிமுக நிகழ்ச்சி கடந்த 14ம் தேதி துபாயில் நடைபெற்றது. தமிழ் இலக்கிய வட்டத்தின் சார்பில் நடந்த நிகழ்ச்சியில் அமீரகத் தொழில் அதிபர் அப்துல் ஹமீது நூலை அறிமுகப்படுத்தி வெளியிட தமிழகத்திலிருந்து வருகை புரிந்த வணிகப் பிரமுகர் திருச்சி ஜீவேந்திரன் பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் திருச்சி ஜாபர் சித்தீக், கோவில்பட்டி ஜீவரத்தினம், முதுவை ஹிதாயத், இப்ராஹிம், முஹம்மது முஸ்தபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Comments
English summary
Madurai based poet Ravi's poem collection titled 'Haiku aatruppadai' was introduced in Dubai on september 14.
Story first published: Monday, September 17, 2012, 16:30 [IST]