130 கிலோமீட்டரை ஒன்றரை மணிநேரத்தி்ல கடந்த இசக்கிமுத்து புறா!
தூத்துக்குடி: தூத்துக்குடி பியர்ல்சிட்டி புறா ரேசிங் கிளப் சார்பில் தூத்துக்குடி மதுரை இடையே 130 கிமீ தொலைவுக்கு புறா பந்தையம் நடத்தப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை நடந்த பந்தையத்தில் 11 உறுப்பினர்களின் புறாக்கள் கலந்து கொண்டன. நடுவர்களாக ஜெயபால், முருகேசன் செயல்பட்டனர். மதுரையில் இருந்து காலை 7 மணிக்கு புறாக்கள் பறக்க விடப்பட்டன. இதில் 1 மணி நேரம் 21 நிமிடம் 4 நெடியில் இசக்கி முத்து என்பவரது புறாக்கள் முதலில் தூத்துக்குடி வந்து முதல் பரிசை பெற்றன.
பியர்ல் சிட்டி பீஜியின் ரேசிங் கிளப் தலைவர் சூசை வில்லவராயர் பரிசு வழங்கினார். துணை தலைவர் ஐயப்பன், செயலாளர் மோட்சம் வாஸ், துணை செயலாளர் ஆனந்த், பொருளாளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜன 22ம் தேதி திருச்சி தூத்துக்குடி இடையே 260கிமீ புறா பந்தையம் நடைபெற உள்ளதாக பந்தைய ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.