துபாயில் இன்று இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு: சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவை ஏற்பாடு
துபாய்: துபாய் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் இன்று(8ம் தேதி) இரவு இஷா தொழுகைக்குப் பின்னர் 8.45 மணியளவில் மார்க்க சொற்பொழிவு மற்றும் ஷரீஅத் கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்த தகவலை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் தெரிவித்தார்.
அஸ்கான் டி பிளாக் லூலூ சென்டர் தேரா பின்புறம் உள்ள அல்-முத்தீனாவில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் ஈமான் அமைப்பின் மீலாத் சிறப்பு விருந்தினராக வருகை புரிந்துள்ள சென்னைப் பல்கலைக்கழக அரபி மொழித்துறை பேராசிரியர் அல்ஹாபிழ் முனைவர் அன்வர் பாதுஷா உலவி எம்.ஏ., எம்.பில்., பி.ஹெச்டி. அவர்கள் சிறப்புச் சொற்பொழிவும், ஷரீஅத் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலும் அளிக்கவிருக்கிறார்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் அருளைப் பெறுமாறு பேரவையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது.