குவைத்தில் காவிய கவிஞர் வாலிக்கு கண்ணீர் அஞ்சலி
குவைத்: காவிய கவிஞர் வாலிக்கு குவைத் தமிழ் கவிஞர் குழாம் இணைந்து நடத்திய கண்ணீர் அஞ்சலி நிகழ்ச்சி 19.07.2013 அன்று மாலை 7.00 மணிக்கு மிர்காப் கன்னியாகுமரி உணவகத்தில் நடைபெற்றது. இரங்கல் கூட்டத்தினை கவிஞர் திரு.வித்யாசாகர் தலைமை தாங்கி நடத்த திரு.ப.சேகர், திரு.மணிகண்டன், திரு.கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
திரு. இராவணன், திரு.சுப்பிரமணி, திரு.சிவமணி, திரு. அப்தாகீர், திருமதி. புனிதா, திருமதி. தேவி ரவி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு.சிவசங்கரன், திரு. நிலவன், திரு. தாமோதரன், திரு. அமானுல்லா, திரு. மதிவாணன் ஆகிய கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் இரங்கல் கவிதைகள் வாசித்தார்கள். வருகை புரிந்த அனைவருக்கும் திரு. நடராஜன் நன்றி கூறினார்.
குவைத் தமிழ் கவிஞர்கள் குழாம் அனைவரையும் குவைத் பாவேந்தர் கழக நிர்வாகிகள் ஒருங்கிணைத்தனர். கவிஞர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் குடும்பத்துடனும், குழந்தைகளுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.