துபாயின் புதிய அடையாளம் 45 மில்லியன் பூக்களாலான மிராக்கிள் கார்டன்
துபாய்: துபாயில் காதலர் தினத்தன்று மிராக்கிள் கார்டன் அதாவது அதிசய பூங்கா அமைக்கப்பட்டது.
காதலர் தினம் ஆண்டுதோறும் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு காதலர் தினத்தன்று துபாயில் பூக்களைக் கொண்டு அதிசய பூங்கா அமைக்கப்பட்டது.
அந்த பூங்கா பற்றிய விவரங்களைப் பார்ப்போம்...
காதலர் தினத்தன்று உதயம்
அரேபியன் ரேஞ்சஸ் அருகேயுள்ள துபாய் லேண்ட் பகுதியில் கடந்த பிப்ரவரி 14ம் தேதி இந்த அதிசய பூங்கா அமைக்கப்பட்டது.
45 மில்லியன் பூக்களைக் கொண்ட பூங்கா
சுமார் 72,000 சதுர அடி பரப்பளவில் 45 மில்லியன் பூக்களைக்கொண்டு இப்பூந்தோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. 400 பேர் 60 நாட்களில் இதனை உருவாக்கியுள்ளனர்.
பார்வையாளர்கள் நேரம்
மே மாத இறுதி வரையிலும் அதனைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் முதல் இப்பூந்தோட்டம் பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை இதனைக் காணலாம்.
துபாயின் புதிய அடையாளம்
துபாயின் புதிய அடையாளமாகக் கருதப்படும் இப்பூந்தோட்டத்தைக் காண்பதன் மூலம் இம்மலர்கள் மனதுக்கு இதமளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.