பிரிந்த தம்பதியர்களை இணைக்கும் தலையணை பேச்சுக்கள்!
பணி நிமித்தமாக பிரிந்திருக்கும் தம்பதியர்களா? நீங்கள்? அப்போ உங்களுக்காகவே ‘பில்லே டாக்' என்னும் புதிய முறையை கண்டுபிடித்துள்ளனர். இதனால் பிரிவுத்துயர் தெரியாமல் தம்பதியர்கள் இருக்கலாமாம். தம்பதியர்கள் தங்களின் இதயத்துடிப்பை ஒருவருக்கொருவர் உணர்ந்து கொள்ளும் வகையில் கூட கருவிகளை கண்டுபிடித்து அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.
கணவன் மனைவி அல்லது காதலர் ஜோடி ஒருவரை விட்டு மற்றொருவர் தூரமாக பிரிந்து இருந்தால் வேதனைதான். நிமிடங்கள் வருடங்களாகும், படுக்கையில் முள் குத்தும், தென்றல் கூட அனலாய் தெரியும், இரவுகள் நீளமாகும். இந்த வேதனையை வார்த்தைகளில் சொல்லவே முடியாது.
என்னதான் நெட் சாட்டிங் மற்றும் டெலிபோனில் மணிக்கணக்கில் பேசி விட்டு படுத்த பிறகும் ஏற்படும் துணையை பிரிந்திருக்கும் இழப்பு சொல்லி மாளாது.
ரொமான்ஸ் மூடு
துணையை பிரிந்து இருப்பவர்களுக்கு ரொமான்ஸ் மூட் வந்து விட்டால் அதைக் கண்ட்ரோல் செய்வது மிகவும் கடினமான விஷயம். இவர்களின் இந்த கஷ்டத்தை போக்குவதென்றே "பில்லோ டாக்" என்ற ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
இன்டர்நெட் இணைப்பு
லண்டனில் உள்ள லிட்டில் ரியாட் என்னும் நிறுவனம் இந்த பில்லோ டாக் கருவியை உருவாக்கியுள்ளது.தம்பதியர்களுக்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தலையனையில் இன்டெர்நெட் இணைக்கப்பட்டுள்ளது.
சிக்னல் ரொமான்ஸ்
வெகுதொலைவில் இருக்கும் உங்கள் பார்ட்னர் படுத்திருக்கும்போது உங்களிடம் இருக்கும் தலையணையில் இருந்து ஒரு வெளிச்சம் வரும். நீங்கள் உங்கள் தலையனையில் கை வைத்தால் இது அவர்களது தலையனையில் வெளிச்சம் வர சிக்னல் செய்யும்.இதன் மூலம் ரொமான்சின் இன்னொரு பரிமானம் வெளிப்படுவதாக உணரலாமாம்.
இதயத்துடிப்பு பேண்ட்
மேலும் நீங்கள் உங்கள் இதயதுடிப்பை கணக்கிடும் பேண்டு ஒன்றை கையில் அணிவதன் மூலம் உங்கள் பார்ட்னரின் போனுக்கு உங்கள் இதயதுடிப்பு அனுப்பப்படும். அவர்கள் உங்கள் இதயதுடிப்பை கேட்கலாம்.