இன்று உலக இசை தினம்: உங்களைப் பொறுத்தவரை இசை என்றால் என்ன?
இன்று உலக இசை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் வளர்ந்து வரும் மற்றும் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் பொது இடங்களில் நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். பெரிய பேண்டுகள் இன்றைய தினத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
இசையை விரும்பாத மனிதன் இருக்க முடியாது. சிலர் டென்ஷன் ஆனால் இசையைக் கேட்டு சாந்தமாவார்கள். சிலர் கவலையாக இருந்தால் தங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்பார்கள். இப்படி இன்பம், துன்பம் என்று அனைத்து தருணங்களிலும் மனித வாழ்வில் இசை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது.
இசை சிறந்த தோழன், வலி நிவாரணி, அழகான உணர்வு, தனிமையை விரட்டும் கருவி என்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உள்ளது. கவலையை பிறரிடம் பகிர்ந்து கொண்டால் அது குறையும் என்றும், அதே மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டால் அது அதிகரிக்கும் என்றும் கூறுவார்கள். அப்படி தான் இசையும். நீங்கள் கவலையாக இருக்கையில் உங்களுக்கு பிடித்த பாடல்களை கேட்டால் கவலை குறையும். அதே சமயம் மகிழ்ச்சியாக இருக்கையில் இசையைக் கேட்டால் அது அதிகரிக்கும்.
இப்படி இசையைப் பற்றி ஆளாளுக்கு ஒரு கருத்து உள்ளது. இசையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!