சூப்பர்.. வாரம் ஒருவர் விடுதி செல்வோம்.. பஹ்ரைன் தமிழர்களின் அசத்தல் கொண்டாட்ட விழா
பஹ்ரைன் மனாமா: பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் "வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல்" திட்டத்தின் 75வது வார கொண்டாட்டம் வெள்ளிக்கிழமை, மார்ச் 15 அன்று குறையாஹ் பகுதியில் அமைந்துள்ள தொழிலாளர் விடுதியில் கொண்டாடப்பட்டது. தொழிலாளர்கள் ஒன்றுகூடி கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் தலைவர் முனைவர் பெ. கார்த்திகேயன் பேசும்போது "வாரம் ஒரு தொழிலாளர் விடுதி செல்லுதல்" திட்டம் கடந்த 2017ம் ஆண்டு உழைப்பாளர் தினத்தன்று சங்க சமூகநலத்துறையின் கீழ் தொடங்கப்பட்டது.
ஒவ்வொரு வாரமும் விடுமுறை நாளான வெள்ளிக்கிழமை அன்று தொழிலாளர் விடுதிகளுக்கு சென்று அவர்களின் நிறை குறைகளை கேட்டறிந்து இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் மது, தற்கொலைக்கு எதிராக பிரச்சாரம் செய்யப்படுகிறது" என்று கூறினார்.
சங்கத்தின் சமூகநலத்துறை செயலாளர் திரு. நோ.கி. பிரவீன் கூறும்போது "75 தொழிலாளர் விடுதிகள் சென்றதன் மூலம் இதுவரை சுமார் 10000 தொழிலாளர்களை சந்தித்திருக்கிறோம், இதற்கு ஒத்துழைப்பு அளித்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்திய தூதரகத்திற்கு நன்றி" என்று கூறினார்.
அனைத்து தொழிலாளர்களுக்கும் இனிப்பு மற்றும் உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து சமூக சேவையாற்றி வரும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தை பஹ்ரைன் வாழ் தமிழர்கள் வெகுவாக பாராட்டினர்.
ஓஹோ.. 36 பேரில் வெறும் 6 பேருக்குத்தான் வாய்ப்பு.. முக்கியமான விஷயத்தை மறந்த ஓபிஎஸ் - இபிஎஸ்!