For Quick Alerts
For Daily Alerts
Just In
பஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் செய்த ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு
பஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்திருந்தது.
பஹ்ரைன்: பஹ்ரைன் வாழ் இஸ்லாமிய தமிழ் மக்களுக்காக பஹ்ரைன் அரசாங்கம் ஈத் பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்திருந்தது.
பஹ்ரைன் ஈத் பெருநாள் பெரும்பாலான வெளிநாடுகளில் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பஹ்ரைன் குதைபியாவில் உள்ள அப்துல் ரஹ்மான் தாக்கில் பள்ளி மைதானத்தில் இன்று காலை 5.40 மணிக்கு நடைபெற்றது,
ஆயிரக்கணக்கான பஹ்ரைன் வாழ் தமிழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் கலந்துகொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி தங்கள் மகிழ்ச்சி மற்றும் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
குடும்பத்தினரை பிரிந்து வளைகுடாவில் வாழும் தமிழ் மக்களுக்கு இந்த நிகழ்ச்சி ஒரு மன ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தந்தது. பஹ்ரைன் தமிழ் தஃவா இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருந்தது.
Comments
English summary
Bakrid festival Celebrated in Bahrain today. Bahrain govt has made all the arrangements for Tamils to Namaz.
Story first published: Tuesday, August 21, 2018, 14:07 [IST]