அபுதாபியில் நடந்த மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
அபுதாபி: அபுதாபி அரோரா இவெண்ட்ஸ் வளாகத்தில் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆரோக்கியமென்ற செல்வம் எனும் தலைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியினை மார்பகப் புற்றுநோய் சிறப்பு நிபுணர் டாக்டர் ஆர்த்தி ஷிராலி தொடங்கி வைத்து உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல முக்கிய, அறிய தகவல்களை விவரித்தார். இதற்காக அவர் சிறப்பு காணொளி காட்சி ஒன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற தாய்மார்களின் கேள்விகளுக்கு விரிவாக விளக்கம் அளித்தார்.
அதனைத் தொடர்ந்து சுகாதாரமான வாழ்வுக்கு யோகாவின் முக்கியத்துவத்துவத்தை விளக்கும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் இந்துமதி மாதவ் செய்முறை பயிற்சியின் மூலம் விவரித்தார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக யோகா பயிற்சியினை மக்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகிறார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்ற தங்களின் விருப்பத்தை தெரிவித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்துமதி மாதவ் உள்ளிட்ட யோகா குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.