இன்று மாலை துபாயில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம்
துபாய்: மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு துபாயில் இன்று மாலை இரங்கல் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் மாலை காலமானார். அவரின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று மாலை மெரினாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் துபாயில் கருணாநிதிக்கு இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
இன்று மாலை சரியாக 6.30 மணியளவில் துபாய் தேரா கிரான்ட் எக்ஸ்செல்சியர் ஹோட்டலில் வைத்து மறைந்த முத்தமிழ் அறிஞர், முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறும். இந்நிகழ்ச்சியில் துபாய் இந்திய தூதுவர் (பொறுப்பு), இலங்கை தூதுவர், மற்றும் மலேசிய துதுவர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் அனைத்து தமிழர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.