'டாலஸ் தமிழ் மன்ற'த்தின் முத்தமிழ் விழா.. ஞானசம்பந்தன், பாண்டியராஜன் பங்கேற்பு!
டல்லாஸ் (யுஎஸ்): டாலஸ் தமிழ் மன்றத்தின் சார்பில் வரும் ஏப்ரல் 9-ம் தேதி சனிக்கிழமை முத்தமிழ் விழா நடக்கிறது.
இதில் தமிழகத்திலிருந்து பேராசிரியர் ஞானசம்பந்தன், நடிகர் - இயக்குநர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த தமிழ் மன்றம் முதல் முறையாக நடத்தும் விழா இதுவாகும்.
சிறுவர்-சிறுமியர் மற்றும் பெரியவர்களின் பரதம் மற்றும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சி, மீனாட்சி தியேட்டர்ஸ் வழங்கும் டாக்டர் காஸ் சாரநாதன் இயக்கத்தில் ‘தர்ம யுத்தம்' நாடகம், பேராசிரியர் ஞானசம்பந்தன் குழுவினரோடு வழங்கும் பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் இந்த விழாவில் நடக்கவிருக்கின்றன.
சனிக்கிழமை பிற்கபல் 2 மணிக்குத் தொடங்கும் இந்த நிகழ்ச்சிகள் இரவு 9 மணி வரை நடக்கின்றன. இடம் லிபர்டி பள்ளி அரங்கம், ப்ரிஸ்கோ.
நிகழ்ச்சியைக் காண 45, 15 மற்றும் 5 டாலர்கள் என டிக்கெட்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.