அபுதாபியில் நடந்த லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம்
அபுதாபி: அபுதாபியில் லிஃப்ட்களில் உயிர் பாதுகாப்பு மற்றும் அதன் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம் நடைபெற்றது.
ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் லிஃப்ட் எனப்படும் மின் தூக்கிகளில் உயிர் பாதுகாப்பு மற்றும் மின் தூக்கிகளின் பராமரிப்பின் அவசியம் பற்றிய கருத்தரங்கம் லீ-ராயல் மெரிடியன் ஹோட்டலில் 17-11-2014 அன்று இரவு நடைபெற்றது.
ஈடிஏ- மெல்கோ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஜப்பான் நிறுவனமான மிட்சுபிஷியின் ஜப்பான் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நிறுவன செயல் இயக்குநர் அஹமது மீரான், மிட்சுபிஷி ஜப்பான் நிறுவனத்தின் யஸூஹிகோ, ஓடோ உள்ளிட்ட மேலாண்மை நிலை இயக்குநர்கள் உரையாற்றினர்.
அவ்வுரையில் கருத்தரங்கின் அவசியம் பற்றியும், மின்தூக்கி பராமரிப்பில் பாதுகாக்கப்படும் பயனாளிகளின் உயிர் பாதுகாப்பு பற்றியும் விளக்கினர்.
இந்நிகழ்ச்சியில் மின்தூக்கிகளின் பராமரிப்பு பற்றிய கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் அபுதாபியில் உள்ள பல்வேறு தொழில் துறை வல்லுனர்கள் கலந்து கொண்டனர்.