14ம் தேதி துபாயில் டிடிஎஸ் இவெண்ட்ஸின் முப்பெரும் விழா: தமிழிசை பங்கேற்பு
துபாய்: துபாயில் டிடிஎஸ் இவெண்ட்ஸ் பெருமையுடன் வழங்கும் முப்பெரும் விழா 14.11.2014 அன்று மாலை 5.30 மணிக்கு இந்திய உயர்நிலைப்பள்ளியின் ஷேக் ராஷித் அரங்கில் நடைபெற இருக்கிறது.
தலைமை விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்மாநிலத் தலைவி தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்கிறார்.
கலைமாமணி சுகி. சிவத்தை நடுவராகக் கொண்டு சண்முகவடிவேல், பேராசிரியர் டாக்டர் பிரேமா, மோகன சுந்தரம், மது, வழக்கறிஞர் சுமதி, மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்கும் பட்டிமன்றம் நடைபெற இருக்கிறது.
நடன ஆசிரியை கவிதா பிரசன்னா வடிவமைப்பில் நடன நிகழ்ச்சியும், பாடல் ஆசிரியை சந்திரா கீதாகிருஷ்ணன் வடிவமைப்பில் பாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.
அரப் லைட், பிளாக் துளிப் பிளவர், ராயல் செஃப் அல் கலீஜ், பாய்ண்ட் காலிமர் சர்வதேசப் பள்ளி, அலையன்ஸ் குரூப், சூப்பர் டெக்ஸ், ஏஎஸ்பி சௌந்தர்யம் ஜென்ரல் டிரேடிங், அல் அஸ்மா டெக்னாலஜி, டிரான்ஸ்கான், வாஸ்டாக், சிவ் ஸ்டார் பவன், அல் வஹா குரூப், யுஏஇ எக்ஸ்சேஞ்ச், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல்ஸ், பெருமாள் பூக்கடை, வெஸ்டர்ன் ஆட்டோ, பேங்க் ஆஃப் பரோடா, லேண்ட்மார்க் கிராண்ட் ஹோட்டல், ஈராஸ் குரூப் உள்ளிட்ட நிறுவனங்கள் அணுசரனை வழங்கியுள்ளன.
ஒன் இந்தியா தட்ஸ் தமிழ் உள்ளிட்டவை ஊடக அணுரசனை வழங்கியுள்ளது.