மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் திறப்பு விழா!
மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளது.
தட்டோன்:மியான்மர் மூன் மாநிலம் தட்டோன் மாநகரில் வள்ளுவர் கோட்டம் வரும் செவ்வாய்க்கிழமை திறக்கப்படவுள்ளது.
உலகப் பொதுமறையாம் திருக்குறளை யாத்தளித்த திருவள்ளுவப் பெருமானாரின் நினைவாக,
உருவாக்கப்பட்ட "வள்ளுவர் கோட்டம்", மியான்மர் தமிழர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் பேராதரவுடனும், வள்ளுவர் கோட்டத் திறப்பு விழாக்குழுவின் பேருழைப்பாலும் இவ்வாண்டு சித்திரைத் திங்கள் 18-ம் நாள்; மே மாதம் 1ம் நாள் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை நாளன்று காலை 8:10 முதல் 12:00 மணிக்குள் பொன்னிகர் நன்னேரத்தில் மியான்மர் நாட்டுக் குறள் பற்றாளர்கள், அறிஞர்கள், மற்றும் இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தமிழறிஞர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கும் திறப்புவிழா நிகழ்ச்சிக்கு மியான்மர் வாழ் தமிழர்கள்
அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாள் :திருவள்ளுவர் ஆண்டு 2049, (1- 5 2018) செவ்வாய்க்கிழமை
நேரம்: காலை 8:10 மணிமுதல் 12:00 மணிவரை
இடம்: வள்ளுவர் கோட்டம், தட்டோன், மியான்மர்