மஸ்கட்டில் நாளை நவராத்திரி பூஜை சிறப்பு நிகழ்ச்சி
மஸ்கட்: மஸ்கட்டில் நாளை (10.10.2015) ஸ்ரீகிருஷ்ணன் கோவில் அரங்கத்தில் நவராத்திரி பூஜை சிறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
காலை 8 மணிக்கு நவராத்திரி பூஜை நடக்கிறது. ஸ்ரீவிஜயகுமார் குருஜி குழுவினர் வேத பாராயணம் வழங்குகின்றனர். அதனைத் தொடர்ந்து 108 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.
மாலை 6 மணிக்கு சென்னையைச் சேர்ந்த கலைமாமணி வீரமணி ராஜு குழுவினர் வழங்கும் அம்மன் பாடல்கள் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இரவு 9 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். வீரமணி ராஜு சிங்கப்பூர் மாரியம்மன் கோவிலின் ஆஸ்தான வித்வானாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விழாவில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த பூஜையின் காரணமாக அனைவரும் சிறப்பான உடல்நலத்துடனும், வசதிகளுடன் திகழ முடியும் என்பது நம்பிக்கையாகும்.
இந்த நவராத்திரி பூஜைக்கான ஏற்பாடுகளை அபுகாதிம் நிறுவனத்தின் பொது மேலாளர் வெங்கடேஷ், மெர்க் செரனோ நிறுவனத்தின் சுரேஷ் குமார் மற்றும் பக்தகோடிகள் செய்துள்ளனர்.