ஈமான் அமைப்பு சார்பில் துபாயில் பேச்சாளர் பயிற்சி முகாம்!
துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது
துபாய் : துபாய் ஈமான் அமைப்பின் சார்பில் பேச்சாளர் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம் ஈமான் அலுவலகம் அமைந்துள்ள அஸ்கான் ஹவுசில் நடக்கிறது. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை மாலை 7.30 மணி முதல் நடத்தப்படுகிறது.
இந்த முகாமுக்கு ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா கான் தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் மேடைப்பேச்சின் முக்கியத்துவம் கருதி இந்த பயிற்சி முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார். இதனை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
மேலும் ஈமான் அமைப்பு மருத்துவ முகாம், ரத்ததான முகாம், இந்திய துணை தூதரகத்துடன் இணைந்து பல்வேறு சேவைகளை செய்து வருகிறது என்றும் அவர் கூறினார். விழாக்குழு செயலாளர் கோட்டாறு சாதி இறைவசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் ஏ.ஹமீது யாசின் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினர்களாக வெஸ்டர்ன் ஆட்டோர் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கமால், தமிழக காங்கிரஸ் கட்சி பிரமுகர் அல்ஹாஜ் எஸ்.எம். இதாயத்துல்லா, இஸ்லாமிய இலக்கிய கழக புரவலர் வழுதூர் எம்.ஜே. அப்துல் ரவூப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினர்களுக்கு அல்ஹாஜ் பி.எஸ். எம். ஹபிபுல்லா பொன்னாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கவுரவித்தார். குணா, ஜெயா தொலைக்காட்சியின் முன்னாள் செய்தியாளர் ரபீக், மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை உள்ளிட்டோர் பேச்சுப் பயிற்சி குறித்த ஆலோசனைகளை வழங்கினர்.
இருபதுக்கும் மேற்பட்டவர்கள் இந்த பயிற்சி முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். அவர்களில் சிறப்பாக பேசிய முகைதீன் அப்துல் காதர், பாத்திமா ஆகியோருக்கு பரிசுகளை அல்ஹாஜ் முஹம்மது மஹ்ரூப், டேலண்ட் பயிற்சி மையத்தின் சன்யோ ஆகியோர் வழங்கினர்.
விழாக்குழு துணை செயலாளர் கீழக்கரை நஜீம் மரைக்காயர் நன்றியுறை நிகழ்த்தினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தேவிபட்டிணம் நிஜாம், சபீர் அலி, கூத்தாநல்லூர் பைரோஸ் கான் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.