For Daily Alerts
Just In
பஹ்ரைனில் நாளை ரத்ததான முகாம்: திருவள்ளுவர் சமுதாய மற்றும் கலாச்சார மன்றம் ஏற்பாடு
மனாமா: திருவள்ளுவர் சமுதாய மற்றும் கலாச்சார மன்றம் பஹ்ரைனில் நாளை ரத்ததான முகாம் ஒன்றை நடத்துகிறது.
பஹ்ரைனில் செயல்பட்டு வரும் திருவள்ளுவர் சமுதாய மற்றும் கலாச்சார மன்றம் பல்வேறு சமூகநல பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் அந்த மன்றம் ரத்ததான முகாம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
மனாமாவின் சல்மானியா மாவட்டத்தில் உள்ள சல்மானியா மருத்துவமனையில் நாளை(25ம் தேதி) இந்த ரத்ததான முகாம் நடைபெறகிறது. முகாம் காலை 9.30 மணிக்கு துவங்குகிறது.
உயிர் காக்கும் ரத்தத்தை தானமாக அளித்து நன்மை பெறுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Comments
English summary
Tiruvalluvar Social and Cultural Association is conducting a blood donation camp at Salmaniya hospital in Bahrain on september 25th.
Story first published: Thursday, September 24, 2015, 12:11 [IST]