24, 25 தேதிகளில் துபாயில் அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் பேட்மிண்டன் போட்டி
துபாய்: அமீரக தமிழ்ச் சங்கம் பேட்மிண்டன் போட்டிகளை நடத்துகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அமீரக தமிழ்ச் சங்கம் நடத்தும் பேட்மிண்டன் போட்டி வரும் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள அல் தவார் உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 20ம் தேதிக்குள் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
24-10-2013 - கலப்பு இரட்டையர் | குழந்தைகளுக்கான ஒற்றையர் பிரிவு போட்டிகள்( வயது 6 முதல் 12 வரை மற்றும் 12 முதல் 16 வரை)
25-10-2013 - ஆண்கள் இரட்டையர் மற்றும் பெண்களுக்கான இரட்டையர் பிரிவு போட்டிகள்
போட்டியில் கலந்து கொள்பவர்கள் தலா 25 திர்ஹம் கட்டணமாக செலுத்த வேண்டும். குடும்பமாக கலந்து கொள்பவர்கள்(2+2) 75 திர்ஹம் செலுத்த வேண்டும்.
முன்பதிவு விண்ணப்பங்களை டவுன்லோட் செய்ய அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்ய http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளங்களுக்கு செல்லவும்.