அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு
ஸ்ரீவைகுண்டம்: அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஸ்ரீவைகுண்டத்தில் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
ஊழலை ஒழிக்க ஜன் லோக்பால் மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கோரி காந்தியவாதி அன்ன ஹஸாரே ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவருக்கு ஆதரவாக இந்தியா முழுவதும் மாணவர்கள், பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீவைகுண்டத்தில் நாளை( 24ம் தேதி) கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
ஸ்ரீவைகுண்டத்தில் இன்று நடந்த வியாபாரிகள் சங்கக் கூட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் சங்க தலைவர் காளியப்பன், துணை தலைவர் கந்த சிவசுப்பு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடியில் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அன்னா ஹஸாரேவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று மாலை பேரணி நடத்துகின்றனர்.