For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

112. நலம் புனைந்து உரைத்தல்

By Staff
Google Oneindia Tamil News

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள்.

(1111)

விளக்கம்:

அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய், நீ வாழ்க, எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னெக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்.


மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று.

(1112)

விளக்கம்:

இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளெப் பூவைப் போன்றதாகுமோ என்று, இக்குவளெ மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே .


முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோள் அவட்கு.

(1113)

விளக்கம்:

அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை


காணிற் குவளெ கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று.

(1114)

விளக்கம்:

குவளெ மலர்கள், இவளெக் கண்டால், இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம் என்று தலெயைக் கவிழ்ந்து நிலத்தை நோக்குமே.


அனிச்சப்பூக் கால்களெயால் பெய்தாள் நுசுப்பிற்கு
நல்ல படாஅ பறை.

(1115)

விளக்கம்:

தன் இடையின் நுண்மையை நினெயாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களெயாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா.


மதியும் மடந்தை முகனும் அறியா
பதியிற் கலங்கிய மீன்.

(1116)

விளக்கம்:

மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலெயில் நில்லாது கலங்கிப் போயினவே.


அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து.

(1117)

விளக்கம்:

அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளதுபோல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?


மாதர் முகம்போல் ஒளிவிட வல்லெயேல்
காதலெ வாழி மதி.

(1118)

விளக்கம்:

மதியமே, இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப்போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய், நீதான் வாழ்க.


மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி.

(1119)

விளக்கம்:

மதியே! இம்மலர் போலும், கண்ணினையுடையவள் முகத்திற்கு நீ ஒப்பாக விரும்புவாய் ஆயின், இம்முகத்தைப் போல யான் மட்டும் காணத் தோன்று! பலரும் காணும்படி தோன்றாதே !


அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

(1120)

விளக்கம்:

மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X