For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

128. குறிப்பறிவுறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சுரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு.

(1271)

விளக்கம்:

நீதான் மறைத்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில்உள்ளதாகும்.


கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோள் பேதைக்குப்
பெண்ணிறைந்த நீர்மை பெரிது.

(1272)

விளக்கம்:

கண் நிறைந்த பேரழகும், மூங்கில்போல் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாகஉள்ளது.


மணியில் திகழ்தரும் நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன் றுண்டு.

(1273)

விளக்கம்:

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப்போல என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்றகுறிப்பும் ஒன்று இருக்கின்றது.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்கும் உள்ளதொன்று உண்டு.

(1274)

விளக்கம்:

அரும்பினுள்ளே அடங்கியிருக்ணுன்ற மணத்தைப்போல என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின்குறிப்பும் ஒன்று உள்ளது.


செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து.

(1275)

விளக்கம்:

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒருமருந்தையும் உடையதாய் இருந்தது.


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து.

(1276)

விளக்கம்:

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும்உட்கருத்தையும் உடையதாகும்.


தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை.

(1277)

விளக்கம்:

குளிர்ந்த நீர்த்துறைக்கு உரியவனான நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும் நம் கைவளையல்கள்முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே.


நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து.

(1278)

விளக்கம்:

நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர். யாமும், அவரைப் பிரிந்து ஏழு நாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலைபடர்ந்தவராய் இருக்கின்றோமே.


தொடிநோக்கி மென்றோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது.

(1279)

விளக்கம்:

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்புஉடன்போக்கு என்பதே ஆகும்.


பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு.

(1280)

விளக்கம்:

கண்ணினால் காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண்தன்மைக்கு, மேலும் சிறந்த பெண்தன்மைஉடையது என்று சொல்லுவர்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X