For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

133. ஊடல் உவகை

By Staff
Google Oneindia Tamil News

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவரளிக்கு மாறு.

(1321)

விளக்கம்:

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்குவல்லது ஆகும்.


ஊடலில் தோன்றும் சிறுதுளி நல்லளி
வாடினும் பாடு பெறும்.

(1322)

விளக்கம்:

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும்,பின்னர்ப் பெருமை பெறும்.


புலத்தலின் புத்தேணாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து.

(1323)

விளக்கம்:

நிலத்தோடு நீர் பொருந்தினாற்போல நம்மொடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும் தேவருலகத்துஇன்பமும் சிறந்ததாகுமோ?


புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை.

(1324)

விளக்கம்:

காதலரைத் தழுவி விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும்தோன்றுகின்றது.


தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறிலின் ஆங்கொன்று உடைத்து.

(1325)

விளக்கம்:

தவறு இல்லாதவரானபோதும், நம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை ஊடலால் நீங்கியிருக்கும்போது ஊடலிலும் ஓர் இன்பம் உள்ளது.


உணலினும் உண்டது அறலினது காமம்
புணர்தலின் ஊடல் இனிது.

(1326)

விளக்கம்:

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும். அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தைவிடஊடிப்பெறும் இன்பமே சிறந்தது.


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்.

(1327)

விளக்கம்:

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர். அந்த உண்மையானது ஊடல் தெளிந்தபின் அவர் கூடிமகிழும்போதுதெளிவாகக் காணப்படும்.


ஊடிப் பெறுகுவங் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு.

(1328)

விளக்கம்:

நெற்றி வியர்வை அரும்பும்படி காதலனுடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து அவர் உணர்த்த மீளவும் சேர்ந்துஇன்புறும்போது பெறுவோமோ?


ஊடுக மன்னோ ஒளியிழை யாம்இரப்ப
நீடுக மன்னா இரா.

(1329)

விளக்கம்:

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே யாம் அவளை இரந்து நிற்கும்படியாகஇராக்காலமும் இன்னும் நீள்வதாக.


ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்.

(1330)

விளக்கம்:

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும். காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவதலையும் பெற்றால், அஃது அதனினும்மிகுந்த இன்பமாகும்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X