24. புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
(231)
விளக்கம்:
உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுக்குப் புகழோடு வாழ வேண்டும். அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் உயிருக்கு ஊதியம் என்பது வேறு யாதும் இலலை.
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்குஒன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்.
(232)
விளக்கம்:
புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது.
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன்று இல்.
(233)
விளக்கம்:
உயர்ந்த எல்லைவரை பரவிநிற்கும் புக
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேன் உலகு.
(234)
விளக்கம்:
உலகத்தின் எல்லைவரை பரவிநிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது, அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.
நத்தம்போற் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க்கு அல்லால் அரிது.
(235)
விளக்கம்:
புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும். செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல் பிறருக்கு ஒரு போதும் கிடைக்காது.
தோன்றிற் புகழொடு தோன்றுக ஆஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று.
(236)
விளக்கம்:
உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடு தான் தோன்ற வேண்டும், புகழ் இல்லாதவர் தோன்றுவதைவிடத் தோன்றாமல் போவதே நல்லது.
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்.
(237)
விளக்கம்:
தமக்கு புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், தம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காவோ?
வசையென்ப வையத்தார்க்கு எல்லாம் இசைஎன்னும்
எச்சம் பெறாஅ விடின்.
(238)
விளக்கம்:
தமக்குப்பின்னரும் எஞ்சிநிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்.
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம்.
(239)
விளக்கம்:
புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங்கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவிதில் குறைபாடு அடையும்.
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்.
(240)
விளக்கம்:
வகை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர். புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.