For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

97. மானம்

By Staff
Google Oneindia Tamil News

இன்றி யமையாச் சிறப்பின வாயினும்
குன்ற வருப விடல்.

(961)

விளக்கம்:

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.


சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர்.

(962)

விளக்கம்:

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்யமாட்டார்கள்.


பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு.

(963)

விளக்கம்:

உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும். செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.


தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.

(964)

விளக்கம்:

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்தவிடத்து, தலையை விட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.


குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின்.

(965)

விளக்கம்:

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.


புகழின்றால் புத்தணோட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை.

(966)

விளக்கம்:

தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது, மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது. அதனால் என்ன பயன்?


ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று.

(967)

விளக்கம்:

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர் வாழ்தலைவிட இறந்தவன் என்று சொல்லப்படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.


மருந்தோமற்று ஊனோம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த விடத்து.

(968)

விளக்கம்:

தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல் மானம் விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பணிக்கு ஏற்ற மருந்தாகுமோ


மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்.

(969)

விளக்கம்:

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால் அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.


இனிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு.

(970)

விளக்கம்:

தமக்கு ஓர் இழிவு வந்தபோது உயிரை விட்டுவிட்ட மானமுள்ளவரது புகழ் வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்.

அதிகாரங்கள்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X