For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மரித்துப் போன மனிதம்- க.மோகனரங்கன்

By Staff
Google Oneindia Tamil News

விஞ்ஞானம்
இந்த பூமி பிறந்து
இருநூறு கோடி
ஆண்டுகள் ஆனது
என்கிறது.

மூன்று கோடி
ஆண்டுகளுக்கு
முன் முதல் உயிர்
முளைத்தது..

குரங்கிலிருந்து
மனிதன் தோன்றியது
35 இலட்சம்
ஆண்டுகளுக்கு முன்தான்.

மனிதனுக்கு
முன் இவ்வுலகில்
பல உயிர்கள் தோன்றி
மறித்தன

ஆனால்..
மனிதனைப் போல்
எவையும் வாழ்ந்ததில்லை.

ஆறாவது அறிவு
மனித வளர்ச்சிக்காகவா..
வீழ்ச்சிக்காகவா...

மனிதனை தவிர
எந்த உயிரும்
இந்த பூமியை
கூறு போடவில்லை..

மனிதனைத் தவிர
எந்த உயிரும் தன்னை
இனம், ஜாதி, மதங்களால்
பிரித்துக் கொள்ளவில்லை

மனிதனை தவிர
எந்த உயிரும் அணுகுண்டு
கண்டுபிடித்து..
தன் இனத்தை
அழித்துக் கொள்ளவில்லை.

மனிதன்
நிலங்களை வேலியிட்டு
சொந்தமாக்கினான்..
ஆனால்..
அவன் உயிரை
அவனுக்கு
சொந்தமாக்க முடியவில்லை

எல்லாம் தனக்கென்று
எண்ணும் அவன்..
ஆறடி நிலமின்றி
மின் அடுப்பில் சாம்பலாகுகிறான்.

தவறுகளை கண்டு மனிதன்
வருந்துவதில்லை
தப்பிவிட்டால் மகிழ்கிறான்.

மாட்டிவிட்டால்
யுத்திகளை மாற்றி தவறுகளை
தொடர்கிறான்..

பொய் இன்று
புத்திசாலித்தனம்..

ஏமாற்றுவது திறமை..

அடிமைப்படுத்துவது
தலைமைக்கான தகுதி..

சுயநலம் மனித
உடலின் குருதி..

நேர்மை காட்சியகத்திற்கு
செல்ல வேண்டியவர்களின்
சொத்து

உண்மை கல்லறைக்குள்
சென்றவர்களின்
உடமை..

மனிதம்
மனிதனிடம் மறித்துப் போனது..

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X