For Daily Alerts
Just In
அழகிய தீயே..
அவசர அவசரமாய்
என் கை தொட்டுப்போன
உன் கனவுகளை தேடிக்கொண்டிருக்கிறேன்..
சரிந்து விழுகின்ற தாவணியை
நீ சரி செய்யும் போதெல்லாம்
இடிந்து போகிறது என் இளமை..
ஜன்னலோர உன் மின்னல் பார்வையில்
உயிரெங்கிலும்
ஒன்பது உலகம் சுற்றும்..
நீ நகம் கடிக்கும் போது
என் உயிர் மெல்ல கூசும்..
வீணையாய் மெல்ல அதிரும்
உன் கொலுசின் ஓசை
வேனிலாய் இதழோரம்
விரியும் உன் புன்னகை..
எல்லாமே சேர்ந்து
கட்டிபோட்டுவிட்டது உனக்குள்
என்னை ஆயுள் கைதியாய்..!!
நீதான் என்றும் எனக்குள்
நிரந்தரமென்று நினைப்பதை மறப்பதற்குள்
நீ வேறு நான் வேறென்று..
முகம் தெரியாத எவனுக்கோ
கழுத்தை நீட்டி
முடிவுரை எழுதினாயே.. நம்
முதல் காதலுக்கு...!!???
Comments
chennai astrology literature poems missing essay poet eelam tamilnadu kural gulf art gallery florals kaasi anandhan
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]