முள்வேலி
வெப்பத்தை வீசியும்
சுட்டெரித்து சுருக்கியும்
ஆதவன் எப்போதும்
ஒரே நிலையில் தான்
நிலமகள் தான் அவனைச் சுழன்று
முகம் திருப்பி விடியலெனவும்- புற
முதுகு காட்டி விடியாதெனவும்
முனகிக் கொள்கிறாள்
தானே விலகினாலும்
நீயே விலக்கினாலும்
உடைவிலகிய கவிதை
உகந்ததே அல்ல
உனது ஓரிரு கவிதைகளோ
கவிதை தொகுப்புகளோ
பூகம்பமாகி.... புரட்சிவெடித்து....
புதுப்புனல் புறப்படப் போவதில்லை
கவரப்படலாம்- உன்
கருத்திற்காக அல்ல
கிளுகிளுப்படையவே
தமிழ் செம்மொழியானாலும்
அதில் பெண்மொழியானாலும் பயனில்லை
அது பெருமைக்குரியதும் இல்லை
நம் துன்பங்களை
எம் மொழியிலும் சொல்லாதே- மீறி
சொன்னாலும் பயனில்லை- ஏனெனில்
ஆண்களில்....
பாதி பேருக்கு அதில் கிளர்ச்சி
மீதி பேருக்கு அதில் இகழ்ச்சி
-பத்ம ப்ரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.