அவள்
உன்னைமட்டுமே பார்ப்பவள் நான்உன்னைமட்டுமல்ல
ஊரையே பார்ப்பவன் அவள் என்றாலும்
உரைப்பதில்லை உனக்கு
அனைத்தும் இரவல்
அடுத்தவனிடம் வாங்கினாள் என்றாலும்
அவளது வெளிச்சப் பகட்டில் மயங்குகிறாய்
யாரோடு யாரை ஒப்பிடுகிறாய்?
நீ அவளையும் விரும்பலாம்
அதற்காக அவளோடு என்னையா?
ஓரவஞ்சனை ஒப்பிடலில் அவளை
ஓரப்பார்வை வேறு
அவளைப் பார்த்துக் கொண்டே
நான் வேண்டும் என்கின்றாய்
என்னைப் பார்த்துக் கொண்டே
அவளும் வேண்டும் என்கிறாய்
வெட்கமின்றி வெறிப்பவள் எதிரில்
வேண்டுமென்றே என்னை கொஞ்சுவாய்
வேறுபக்கம் போகாமல் அவளும்
வெளிச்சம் வேறு போடுவாள்
உன்னை பார்க்க இயலாத அவளின்
அந்த மூன்று நாட்கள் மட்டுமே
நீ எனக்கே எனக்கு
நான் இருந்தாலும் போனாலும்
நேரம் கடந்துதான் வந்தாலும்
நேர்த்தியாய் உன்னோடு மாலையில் அவளுண்டு
எனவே..
அந்த நிலாப் பெண்ணை
அப்புறப்படுத்து
அவள், நீ, நான் என
கோஷ்டி காதல்
அனுசரிக்க என்னால் இயலாது.
- பத்மப்பிரியா([email protected])
இவரது முந்தைய படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்
படைப்புகளை அனுப்ப:
கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]
படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.