For Daily Alerts
Just In
நான் பாட மாட்டேன்- சத்தி சக்திதாசன்
உண்மையைத் தொலைத்து விட்டு
உள்ளத்தினுள் புதைத்து விட்டு
உணர்ச்சியற்று வாழும்
ஊனமுற்றோரை நான்
பாட மாட்டேன்
கண்களை கட்டிக் கொண்டு
கைகளை மூடிக் கொண்டு
கண்ணீரில் வாழ்வோரைக்
காண மறுக்கும் இந்தக்
கருத்துக் குருடரை நான்
பாட மாட்டேன்
நெஞ்சத்தை நிமிர்த்திக் கொண்டு
நேசத்தை மறைத்துக் கொண்டு
நயவஞ்சகமாய் வரதட்சணையால்
நங்கையர் வாழ்வைத் தமக்காக
நசுக்கும் இந்த வீணரை நான்
பாட மாட்டேன்
பாசத்தை கண்முன்னால்
வேஷம் கட்டிக் கொண்டு
மோசம் பல செய்யும் இந்த
நாசகாரப் புதல்வரவர் ஆடும்
நாடகத்தை கண்டு நான்
பாட மாட்டேன்
பாட மாட்டேன் நான்
பாட மாட்டேன்- இந்தப்
புல்லுருவிகள் வாழும் உலகில்
புனிதர்களை காணும் மட்டும்
பூட்டித்தான் வைப்பேன் கவியுள்ளத்தை
பாட மாட்டேன்
Comments
Story first published: Thursday, February 2, 2006, 16:50 [IST]