For Quick Alerts
For Daily Alerts
Just In
வாழ்ந்து வருகிறேன்
- பாஷா
எனக்கென்று ஒரு உலகம்
அதில் நீயும்
உன்னைச் சார்ந்தவைகளும்.....
உலக பேரழகியின் புன்னகையும்
உன்னத புகழின் ஒரு துளியும்
குழலிசையாய் பெருகிவந்து
என்னைத் தொடாத ஒரு
தூர வெளியில் உன்
ஞாபகங்களின் ஒவ்வொரு சொட்டிலும்
இடையறாது நனைந்துகொண்டிருப்பேன்
ஒரு நாள்
மரணம் வந்து என் வாசல் தட்டும்
அழைத்து உபசரிப்பேன்
உன் நலன் விசாரிப்பேன் - பின்
நீ உறைந்த அதன் வாகனத்தில்
மழை தூரலில் ஜன்னல் விரும்பும் குழந்தையாய்
உன்னருகில் வருவேன்
அதுவரை
வாழ்ந்துவிட்டு போகிறேன்
நீ வாழ்ந்த இடத்தில்
நீ விரும்பிய பூக்களோடு
உன் பாடலை பாடிக்கொண்டு.......
- பாஷா([email protected])
Comments
Story first published: Wednesday, December 19, 2007, 18:07 [IST]