For Daily Alerts
Just In
கலாச்சாரத்தின் பிடியில்
-மன்மதன்
இரவு நேரம்
வழியனுப்பிச் சென்ற நண்பன் நினைத்திருப்பான்
மிதவைப்பேருந்து மிகவும் நன்றென்று-ஆனால்
மிதவைப்பேருந்து மிதக்க வைத்தது என்னையல்ல
முன் இருக்கையில் உள்ளவர்களை மட்டுமே
குலுங்கியது முன் இருக்கைகள் மட்டுமல்ல
என் உணர்வும், மனமும் தான்
நகரஎல்லை வரை வந்த வெளிச்சம்
முன் இருக்கையில் உள்ளவர்களுக்குத் தொல்லை
சத்தம் இல்லாமல் முத்தங்கள் பரிமாறப்பட்டன
நித்திரையில்லாமல் நானோ என் வயதறிந்தேன்
கலாச்சாரம் விட்டுவிடவில்லை அவர்களையும்-நினைக்கிறேன்
இல்லாமல் இருக்க அவர்களைப்போல் நானும்
உணர்வுப்பட்டறை என்மனம் பழுதை சரிசெய்ததால்
நம்புகிறேன் நானும் நல்லவன் தான்
மன்னிக்க வேண்டுகிறேன் மங்கையே-நானும்
என் மனது ஏதேனும் பிழையிருந்தால்...
-மன்மதன்([email protected])
Comments
Story first published: Monday, December 31, 2007, 11:54 [IST]